54 வயதாகியும் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த sj சூர்யா..

நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்பொழுது பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் தான் எஸ் ஜே சூர்யா. இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். மேலும் இயக்குனராக பணியாற்றத் தொடங்கியதால் சினிமா துறையில் தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.

இதன் மூலம் பல முன்னணி நடிகர்களை வைத்து ஏராளமான ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.இவ்வாறு பிரபலமடைந்து பிறகு ஹீரோவாக நடித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து திரைப்படங்கள் இயக்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் இயக்கி வந்தார் சமீப காலங்களாக இவருக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் எஸ்.கே சூர்யா சிறிய வயதில் காதலித்தேன் சில வருடங்கள் கழித்து அதனை முழுவதுமாக மறந்து விட்டேன் மேலும் முடிந்து போன விஷயங்களை நான் மேலும் யோசிப்பது கிடையாது என வெளிப்படையாக கூறியுள்ளார். இவ்வாறு பல வருடங்களாக முரட்டு சிங்கிளாக இருக்கும் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அது மட்டுமல்லாமல் எனக்கு தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இனிமேல் சினிமாவில் மட்டுமே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த இருப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு சமூக வலைதளங்களில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது உண்மை இல்லை எனவும் கொஞ்சம் கூட திருமணத்தைப் பற்றி எனக்கு யோசிக்க நேரமில்லை எனவும் கூறிவுள்ளார்.இவ்வாறு தொடர்ந்து நடிகர்களை வைத்து திரைப்படங்கள் இயக்க திட்டமிட்டு இருப்பதாக முடிவு எடுத்துள்ளாராம்.

அந்த வகையில் தன்னிடம் ஒரு சிறந்த கதை இருப்பதாகவும் முன்னணி நடிகர்கள் தொடர்ந்து நடித்து வருவதால் அவர்கள் நடித்த முடித்துவிட்டு தனக்கு காட்சி கொடுத்தவுடன் படத்தை இயக்க இருப்பதாகவும் நீண்ட வருடங்கள் கழித்து தன்னுடைய இயக்கத்தில் ஒரு பிரம்மாண்டமான வெற்றியை கொடுக்க விரும்புவதாகவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Leave a Comment