மின்னலே படத்தில் கௌதம் என போட்டதற்கு காரணம் இதுதான்.! ப்ளூ சட்டை மாறனின் கேள்விக்கு தரமான பதிலடி..

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த படத்தினை புளு சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து இருந்தார் அவரது விமர்சனத்தில் கூறியதாவது பார்த்திபன் ஒரு அவ்வார்ட் பைத்தியம் என்றால் கௌதம் வாசுதேவன் மேனன் ஒரு வாய்ஸ் ஓவர் பைத்தியம்.

இதை நன்றாகவே கண்டுபிடித்து மக்கள் போன படத்திலேயே கலாய்த்து விட்டதால் இனி வாய்ஸ் ஓவர் கொடுத்தாள் நம்மை கலாய்ப்பார்கள் என்று இந்தப் படத்தில் அப்புகுட்டி மூலமாக வாய்ஸ் ஓவரில் கதையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது கௌதம் மேனனுக்கு இன்னும் அந்தப் பைத்தியம் முழுதாக குணமாகவில்லை என்பது தெரிகிறது என கலாய்த்துள்ளார்.

மேலும் ஹீரோ ஒரு பெரிய டானாக மாறி வருகிறார் என்றதும் அவரைக் கொல்ல ஒரு பெரிய ரவுடியை ரெடி செய்கிறார்கள் அது யார் என்றால் விக்ரம் படத்தில் குட்டியாக லில்லி புட்டு போல மினி வாட்டர் போல வருவாரே அவரை ஒரு கோடி ரூபாய் கொடுத்து ஹீரோவை கொல்ல ஏற்பாடு சொல்கிறார்கள் என்று ஜாபரை உருவா கேள்வி செய்த ப்ளூ சட்டை வீணா போனவன் எப்படி டான் ஆனான் என்பதை தான் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்றும் இந்த படத்தை மிகவும் கேவலமாக விமர்சித்து இருக்கிறார்.

இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கௌதம் மேனன் புளு  சட்டை மாறன் பற்றி விமர்சித்திருந்தார் அதாவது ப்ளூ சட்டை மாறன் மேலே எனக்கு அவ்வளவு கடுப்பு சேனலுக்கு ஸ்பான்சர் கிடைக்கிறதுக்கும், அவருக்கு பணம் வரத்துக்காக ஒரு படத்தை தரகுறைவாக விமர்சித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதனால் இதனை பார்க்கும் பொழுது மிகவும் கோபம் வருகிறது நீ ரிவ்யூ பண்ணு ஆனால் இளக்காரமாகவோ, தரைக்கிறோம் விமர்சனம் செய்யாத மேலும் அவர் சொன்ன திருச்சிற்றம்பலம் படத்தோட விமர்சனத்தை பார்க்கும் பொழுது அதில் முதல் 10 நிமிஷம் படத்தை பற்றி கழுவி ஊற்றிவிட்டு நடுவுல படம் நல்லா இருக்குன்னு சொல்றாரு இதெல்லாம் பாக்குறப்போ இறங்கி ஏதாவது செய்யலாம்னு தோணுது அந்த அளவுக்கு கோபம் வருது மத்தவங்களுக்கு அப்படி கோபம் வரதான் எனக்கு தெரியல ஆனா உண்மையிலேயே எனக்கு இறங்கி ஏதாவது செய்யலாமுனு தோணுது என கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாறன் அவரது பெயரில் இருக்கும் மேனன் என்ற சாதி பெயரை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் அதாவது கௌதம் என இயக்கிய முதல் படமான மின்னலே பட போஸ்டரில் பதிவிட்டு அதில் கௌதம் மேனனின் பெயர் கௌதம் என்று குறிப்பிட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார் மேலும் தமிழ் சினிமாவில் கௌதம் என்ற பெயருடன் நுழைந்து விட்டு பின்னர் மேல் சாதிப் பெயரான மேனன் என்ற சாதி பெயரை போட்டுக்கொண்டு தன்னை உயர்த்திக்கொண்டார்.

சாதிப் பெயரை பின்னால் போட்டுக் கொள்வதை விரும்பாத தமிழகத்தில் சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என்று ஜாதியை குறிப்பிட்டு விமர்சித்து இருக்கிறார். இதற்கு பதில் அளித்த கௌதமேனன் எனக்கு பிறக்கும்பொழுது வைத்தது கௌதம் வாசுதேவ் மேனன் தான் என் அனைத்து சான்றிதழ்களிலும் அப்படி தான் இருக்கும் மின்னலே படம் பண்ணும் பொழுது என் பெயரை கௌதம் வாசுதேவ் மேனன் என்று போட்டு தான் தயார் செய்து இருந்தோம் ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் முரளி இல்லை அப்படி வேண்டாம் கௌதம் என்று வைத்துக் கொள்ளலாம் எனக் கூறியதால் தான் இவ்வாறு செய்யப்பட்டது என கூறியுள்ளார்.

Leave a Comment