“மைக் மோகன்” என்ற பெயர் உருவானது இப்படிதான் – உண்மையை உடைத்த நடிகர் மோகன்.!

mohan
mohan

80 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் மைக் மோகன் இவர் ஆரம்ப காலகட்டத்தில் பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, விதி, மௌனராகம், மெல்ல திறந்தது கதவு என பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெள்ளி விழா நாயகன் என பார்க்கபார்க்கப்பட்டர்.

அந்த அளவிற்கு மிகவும் ஃபேமஸான இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இழந்து..  இருக்கின்ற இடம் தெரியாமல் போனார் ஆனால் இவரது ரசிகர்கள் இவரை விட்டு பிரியாமல் இன்றுவரையிலும் இருந்து வருகிறார்கள் அந்த ரசிகர்களுக்காக தற்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது ஹரா என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை விஜயஸ்ரீ இயக்கியுள்ளார் இந்த படம் ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகியிருந்தாலும் இந்த படத்தில் அப்பா – மகள் பாசத்தை எடுத்துரைக்கும் ஒரு படமாக உருவாகியுள்ளது இந்த படம் குறித்து தனது சினிமா பயணம் குறித்தும் பேசி உள்ளார் மைக் மோகன் பேசியுள்ளார்.

என்னுடைய முதல் படம் கோகிலா கன்னடத்தில் வெளியானது பாலு மகேந்திரா பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவன் நான் அவர் மூலம் நான் திரையுலகில் அறிமுகமானது எனது பாக்கியம் கோகிலா படத்தை இன்று பார்த்தாலும் அது அப்டேட்டாக இருக்கும் கமலின் பிடித்தமான படங்களில் அந்தப் படமும் இருக்கும்.

இப்போ ஹரா படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி அப்பா – மகள் குறித்து பாசத்தை இந்த படம் வெளிப்படுத்தும் என்னுடைய ரசிகர்கள் நான் படத்தில் நடிக்காத போதும் கூட எனக்காக என்னுடைய பிறந்தநாளில் அன்னதானம் கொடுத்து கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சி என்றார். என்னை எல்லோரும் மைக் மோகன் கூறுவதற்கு காரணம் இருக்கிறது நான் நிறைய படங்கள் நடித்திருந்தாலும், பாடகராக நடித்து வெகு சில படங்கள் தான்..

அந்த படங்களில் இளையராஜாவின் இசையில் எஸ்பிபி குரலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் வெற்றி அடைந்ததும் என்னை மைக் மோகன் என்று ஆரம்பித்து விட்டார்கள் அது மட்டுமல்லாமல் ஒரு முறை நான் எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்ட இறந்து விடுவேன் என்றும் கூறியிருந்தார்கள் ஆக நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை என்றார்.