அஜித்தால் இன்று வரை விட முடியாத ஒரே கெட்ட பழக்கம் இதுதான்.! எவ்வளவு முயற்சி செய்தும் ஷாலினியால் கூட மாற்ற முடியவில்லை..

திரைப்படங்களில் நடித்து வரும் பொழுது காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளில் ஒரு ஜோடி தான் அஜித் மற்றும் ஷாலினி இவர்கள் இருவருமே திரைப்படங்களில் சேர்ந்து நடிக்கும் பொழுது காதல் மலர்ந்து அவர்களுக்கு தற்பொழுது ஒரு பெண்,ஒரு ஆண் என சந்தோஷமாக தங்களது பிள்ளைகளோடு இல்ல வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அஜித் தற்பொழுது துணிவு திரைப்படத்தை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்தத் திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள் இதனைத்தொடர்ந்து அஜித் பற்றிய ஒரு விஷயம் வெளியாகி உள்ளது அதாவது அஜித்திடம் இருக்கும் ஒரே ஒரு கெட்ட பழக்கத்தை திருமணம் செய்து கொண்ட ஷாலினியால் இப்பொழுது வரை மாற்றவே முடியவில்லையாம்.

ஆம் அஜித் உடன் நெருங்கி பழகிய பிரபல இயக்குனர் ஒருவர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக அஜித்தை பற்றி கூறியுள்ளாராம் அதாவது நாளைக்கு என்ன தேவை என்பதை அஜித் கொஞ்சம் கூட நினைத்து பார்க்க மாட்டாராம் ஒரு சிறிதளவு கூட சேமிப்பு வைத்துக்கொள்ள மாட்டாராம் இதனை ஆசை படத்தில் நடிக்கும் பொழுது வெறும் ரூ.25 ஆயிரம் மட்டும் தான் சம்பளம் பெற்றார்.

ஆனால் இப்பொழுது ரூ.100 கோடி வரை சம்பளம் வாங்கும் அஜித்திற்கு அப்பொழுது இருந்து இப்பொழுது வரை கொஞ்சம் கூட மாறவே இல்லையாம் நாளைக்கு என்ன செய்வது தனது மகள்,மகனுக்கு என்ன செய்வது அவர்களுக்கு ஒரு சிறு சேமிப்பு வைத்துக் கொள்வோம் என்பதில் அஜித் கொஞ்சம் கூட அந்த விஷயத்தில் நுழைய மாட்டாராம் பணமிருந்தால் பலருக்கும் உதவி செய்து கொண்டே இருப்பாராம்.

aasai
aasai

இதனை திருமணம் முடிந்தும் ஷாலினிபலமுறை கூறியும் அஜித் இந்த விஷயத்தை விடவே இல்லாமல் ஒரு கெட்ட பழக்கமாக வைத்துக் கொண்டே இருக்கிறாராம் மேலும் இந்த விஷயத்தை அஜித்துடன் ஆசை,வாலி போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரிமுத்து அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி வெளிப்படையாக பேசி உள்ளதாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இதற்கு ஏற்றது போல் அஜித்தின் ரசிகர்கள் தல எப்பொழுதுமே தல தான் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment