அஜித் “கார் ரேஸை” விட்டு வெளியேற முக்கிய காரணமே இதுதான்.. உண்மையை உடைத்த பிரபல பத்திரிகையாளர்

நடிகர் அஜித்குமார் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க லைகா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது 62 வது படத்தில் நடிக்க ஓகே சொன்னார்.

முதலில் விக்னேஷ் சிவன் இந்த படத்தை எடுக்க ஓகே சொல்லப்பட்டது ஆனால் அவர் சொன்ன கதை திருப்தி கொடுக்காததால் அவரை நீக்கிவிட்டு மகிழ் திருமேனினிடம் தஞ்சம் அடைத்தது அவர் தற்போது ஏகே 62 படத்திற்கான கதையை வலுவாக எழுதிக் கொண்டிருக்கிறாராம் வெகு விரைவிலேயே ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தை பற்றிய புதிய மற்றும் பழைய செய்திகள் வெளி வருகின்றன அப்படி நடிகர் அஜித் குறித்து நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். அஜித்திற்கு சினிமாவையும் தாண்டி மற்றவற்றில் அதிகம் ஆர்வம் கொண்டவர் அந்த வகையில் கார் ரேஸில் ரொம்ப தீவிரமாக இருந்தார் ஒரு கட்டத்தில் அவர் சினிமாவையும் தாண்டி கார் ரேஸில் அதிகம் தீவிரம் காட்டி வந்தார்.

விபத்துக்கள் ஏற்படா பின் சினிமாவில் தஞ்சமடைந்தார் இப்படித்தான் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் பயில்வான் ரங்கநாதன் சொன்னது என்னவென்றால்.. அஜித் கார் ரேசிங்கில் இருந்து வெளிவர முக்கிய காரணம் அவருக்கு கடைசியில் ஸ்பான்சர் யாரும் கிடைக்காதால் தான் அஜித் கார் ரேஸை விட்டு வெளியே வந்தார் என கூறி இருக்கிறார்.

விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்படி எல்லாம் கிடையாது அஜித்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது மேலும் தனது ரசிகர்களுக்காக படங்களை கொடுக்க அவர் சினிமா பக்கம் வந்ததாக கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment