விஜய் உடன் நடிக்கும் போது நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான்.! நடிகை பிரியங்கா சோப்ரா வெளிப்படை.

சினிமா உலகை பொறுத்தவரை இப்பொழுது மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் தான் ஆட்சி செய்கின்றனர். அந்த வகையில் உலக அழகி என்ற பட்டத்தை பெற்ற பிறகு  பிரியங்கா சோப்ராவுக்கு அதன்பின் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

2002ஆம் ஆண்டு மஜித் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் தமிழன்  இப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து தனது பயணத்தை தொடர்ந்தார் பிரியங்கா சோப்ரா. அதன்பின் இவருக்கு தமிழை தாண்டி ஹிந்தி பக்கம் வாய்ப்புகள் அதிகம் குவிந்ததால் அங்கேயே தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார்.

போதாத குறைக்கு வெப் சீரிஸ்களும் குவிந்தன இதனால் இவரது பெயர் உலக அளவில் பேசப்பட்டது. டாப் நடிகர்கள் படங்களில் திறமையை ஒரு பக்கம் காட்டினார் என்றால் மறுபக்கம் கிளாமரையும் காட்டி நடித்த நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது இவர் தன்னைவிட வயது குறைந்த பிரபல பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது திருமண வாழ்க்கை சிறப்பாக போய் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருகிறார் பிரியங்கா சோப்ரா இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பட வாழ்க்கை குறித்து பேசியுள்ளார் அதில் நடிகர் விஜய் பற்றியும் அவர் பேசியுள்ளார்.

எனக்கு தமிழ் பேச தெரியாததால் தமிழன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது நான் வசனங்களை கேட்டு அவற்றை மனப்பாடம் செய்து அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு அதன் பிறகு தான் என்னுடைய வரிகளை பேசுவேன் ஆனால் என்னுடைய சக நடிகர் விஜய் நடிப்பதை பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

என்னுடைய திரை வாழ்க்கையின் ஆரம்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சில படங்களில் இதுவும் ஒன்று விஜய் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பணிவுடன் இருப்பார் ஒரு முறை படப்பிடிப்பு தளத்திற்குள் வந்துவிட்டால் அதன் பிறகு வெளியே செல்ல மாட்டார் அதை இப்போதும் நான் கடைப்பிடித்து வருகிறேன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் என்றால் மட்டுமே நான் கேரவனுக்குள் சென்று திரும்பி வருவேன் என பிரியங்கா சோப்ரா கூறினார்.

Leave a Comment