நான் நடிச்சதிலேயே பிரச்சனை இல்லாத படம் இதுதான்.! சக்சஸ் மீட்டில் கண்கலங்கி பேசிய சிம்பு..

தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில்  நடிக்க தொடங்கிய சிம்பு அவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒரு வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் சமிபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியின் காரணமாக சக்சஸ் மீட்டில் நடிகர் சிம்பு பேசியுள்ளார்.

சிம்பு நடித்துள்ள வெந்து தனது காடு திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் தனது உடலை வருத்திக் கொண்டு இந்த படத்தில் நடித்த நடிகர் சிம்புவிற்கு ஒரு நல்ல பலன் கிடைத்து உள்ளது. வித்தியாசமான கதை அம்சத்துடன் ரிலீசாகி உள்ள படத்தை தமிழகத்தில் உதயநிதி அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட்டுள்ளது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதால் படகுழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு வெற்றியின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது இதில் நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதன் பிறகு ஒவ்வொருவரும் படத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்த மீடியாவிற்கு நன்றி தெரிவித்தனர்.

அதன்படி பேசிய சிம்பு அவர்கள் ரிலீஸ்க்கு முன் மக்கள் படத்தை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்ற பயத்தில் நான் இருந்தேன் ஆனால் ரிலீஸ் ஆனதற்கு பின் படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நான் நடித்ததிலேயே பிரச்சனையே இல்லாமல் ரிலீஸ் ஆன படம் இதுதான் என்று நடிகர் சிம்பு அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் இந்த படம் மக்கள் மத்தியில் இவ்வளவு ரீசானதற்கு முழு காரணம் விமர்சனகர்கள்தான் அவர்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்துள்ளார் அதனை தொடர்ந்து சினிமாவில் தட்டி விடுவதற்கு பல பேர் இருக்காங்க ஆனால் தூக்கி விடுவதற்கு யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment