தலைவர் 170வது படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் இதுதான்.! வெளியான தகவல் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டதால் தற்போது மிக விறுவிறுப்பாக நடிபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் பிற மாநில சூப்பர் ஸ்டார்களை இறக்கி இருக்கிறார் நெல்சன் திலிப் குமார்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக தனது மகள் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார் நடிகர் ரஜினி. இந்த படத்திற்காக நடிகர் ரஜினி அவர்கள் ஏழு நாட்கள் கால் சீட்டு கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது அது மட்டுமல்லாமல் இந்த ஏழு நாட்களுக்கு 24 கோடி வரை சம்பளம் பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக தனது 170வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் யார் குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த வகையில் படக்குழு அறிவித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல் அவர்கள் இயக்க இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்தது தற்போது தலைவர் 170வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் இந்த நிலையில் தலைவர் 170 வது படத்தின் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தலைவர் 170 வது திரைப்படம் ஜெய் பீம் படம் போல் இருக்குமா என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் தலைவர் 170 வது படத்தில் நடிகர் ரஜினி அவர்கள் ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம் அதுமட்டுமல்லாமல் தூக்கு தண்டனையை எதிர்த்து போராடப் போகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது உறுதி செய்யப்பட்ட தகவலாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment