நடிகர் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ஆசை இதுதான்.! நடிகை மீனா கூறிய சுவாரசியமான தகவல்..

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது வயதானாலும் கூட அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களுடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் தோல்வினை பெற்று வரும் நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் வெற்றியினை பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ஆசையை பற்றி நடிகை மீனா சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மீனா தற்பொழுது ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக ரஜினி படத்தில் நடித்திருந்த இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அந்த வகையில் இவர்களுடைய நடிப்பில் வீரா, எஜமான், முத்து ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இதனை தொடர்ந்து நீண்ட வருடங்கள் கழித்து ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் நடிகை மீனாவின் கணவர் உடல்நல பாதிப்பால் உயிரிழந்த நிலையில் இவர் குறித்த ஏராளமான சர்ச்சை கூறிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

இவ்வாறு இப்படிப்பட்ட நிலையில் மறுபுறம் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார் அதில் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு படத்திலாவது மீனா அம்மாவாக நடித்து விட வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை இருப்பதாகவும் கூறினார்.

Leave a Comment