அப்பொழுதே சொந்தமாக விமானம் கப்பல் என செம ராயலாக வாழ்ந்த நடிகை இவர்தான்.!

பொதுவாக சினிமா என்றாலே நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிக அளவில் இருந்து வரும் ஏனென்றால் நடிகைகளை விடவும் நடிகர்களுக்கு தான் கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும். எனவே நடிகர்களும் கார், பங்களா என்று மிகவும் சொகுசாக வாழ்ந்து வருவார்கள்.

அந்தவகையில் சினிமா என்றாலே ஆண்களுக்கு தான் எதிலும் முன்னுரிமை அதிலும் முக்கியமாக ஒரு நடிகர் தனது வயது 60 ஆனாலும் கூட அவரால் முன்னணி நடிகராக வலம் வர முடியும் ஆனால் நடிகை என்றால் அப்படி கிடையாது. குறைந்தது 15 வருடங்கள் மட்டும்தான் அவர்களால் தொடர்ந்து முன்னணி நடிகைகளாக இருக்க முடியும்.

அதன் பிறகு தங்களது அழகு குறைந்ததும் இவருக்கென்று இருந்த மார்க்கெட் இல்லாமல் போய்விடும். ஆனால் அந்த காலத்திலும் ஒரு நடிகை சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா, கார் என்று மிகவும் ஆடம்பரமாக ராணி போல வாழ்ந்துள்ளார். அந்த வகையில்  ஒரு லட்சம் இருந்தாலே அவர்கள் தான் பணக்காரர்கள்.

அந்த வகையில் ஒரு லட்சம் என்றால் அவ்வப்பொழுது ஒரு கோடி சமம். அந்த வகையில் மிகவும் சொகுசு ராணியாக வாழ்ந்தவர் தான்  கே ஆர் விஜயா.  இவர் ஒரு முன்னணி நடிகையாக இருந்தாலும் இந்த நடிகர்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று கட்டளை போட மாட்டார் இளம் நடிகராக இருந்தால்கூட அவருக்கு ஜோடியாக நடிப்பார்.

அந்த வகையில் கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவிலும் தனக்கென்று பேர்,புகழ்,பணம் என்ற அனைத்தையும் சம்பாதித்தார். அந்த வகையில் இவர் நடித்த காலகட்டத்திலும் சரி தற்போதும் இவர் அளவிற்கு மற்ற எந்த நடிகையாலும் நடித்திருக்க முடியாது என்று தான் கூற வேண்டும். தற்பொழுது நயன்தாரா எப்படி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார் அதேபோல் கே ஆர் விஜயாவும் இவரின் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment