நடிகை ரம்பாவா இது என ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு வெளிவந்த புகைப்படம்.!

பல வருடங்களாக சினிமாவில் நடித்துவிட்டு தற்பொழுது சைலண்டாக இருக்கும் நடிகைகளில் ஒருவர்தான் ரம்பா இவர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் பார்த்தால் இவர் நடித்த இந்த முதல் திரைப்படமே இவருக்கு மக்களிடையே நல்ல பெயரை வாங்கி தந்து விட்டது.இதனைத் தொடர்ந்து செங்கோட்டை,அருணாச்சலம்,காதலா காதலா,மின்சார கண்ணா,அன்புடன்,ஆனந்தம் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து மக்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கி விட்டார்.

திருமணம் முடிந்த பிறகு அதிகமாக திரைப்படங்களிலும் இவர் நடிக்கவில்லை என்றே கூறலாம் அந்த வகையில் பார்த்தால் இவருக்கு கடந்த 2010ம் ஆண்டு இந்திர குமார் பத்மநாதன் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு ஒரு அழகிய மகனும் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.

அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை ரம்பா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருவதை வேலையாக வைத்துள்ளார் அதேபோல் தற்பொழுதும் இவர் தனது சகோதரருடன் இருக்கும் குடும்பப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ரம்பாவா இது என ஆச்சரியப்பட்டு இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது எப்படி இருந்தார் ஆனால் தற்பொழுது எப்படி உள்ளார் என பாருங்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

rambha
rambha

Leave a Comment