சூர்யாவின் ரீல் மகளா இது .! 25 வயதில் அடையாளம் தெரியாமல் மாறி இருக்காங்க…

சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி தற்போது பல நடிகர் மற்றும் நடிகைகள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு நடிகை குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி தற்போது கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

அந்த வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரேயா ஷர்மா நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியாக சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக நடித்து தமிழில் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா ஷர்மா.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தெலுங்கு சினிமாவில் வெளியான காயகுடு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வந்த ஸ்ரேயா தற்போது வழக்கறிஞர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மற்ற நடிகைகளை போல இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த நடிகையா இது இம்புட்டு அழகாக இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். அந்த வகையில் தனது 25 வயதாகிய நிலையில் க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்…

shriya sharma
shriya sharma
shriya sharma
shriya sharma

Leave a Comment