ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் இதுதான்.! வெளியான தகவலால் குழப்பத்தில் ரசிகர்கள்…

சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமாக இருந்த நெல்சன் திலிப் குமார் அவர்கள் ஒரு சில பிரச்சனையின் காரணமாக இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது அதன் பிறகு நயன்தாராவை வைத்து கோலமாக கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நெல்சன் திலிப் குமார்.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். என்னதான் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் அப்டேட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிக் கொண்டே இருக்கும் நிலையில் தற்போது இறுதி கட்ட படபிடிப்பை நெருங்கி விட்டதால் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன்லால், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படையப்பா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடைய கூட்டணியில் வெளியான படையப்பா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டியவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயிலர் திரைப்படத்திலும் நீலாம்பரி கதாபாத்திரம் போல் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் தகவலை கேட்டு குழம்பிப்போய் இருக்கிறார்கள் ரசிகர்கள் அதாவது ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் ரஜினியின் மனைவியாக நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் குழம்பிபோய் இருக்கிறார்கள். விரைவில் இத்திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment