“நடிகர் ரகுவரன்” பிரமித்து பார்த்த ஒரு விஷயம் இதுதான் – எமோஷனலாக பேசிய ரோகிணி

80,90 காலகட்டத்தில் மிகப்பெரிய ஒரு நடிகராக வலம் வந்தவர் ரகுவரன்.  இவர் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையுமே ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பல கதாபாத்திரத்தில் தனது முழு திறமையை வெளிப்படுத்தி நடித்தால் இவருடைய பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள்..

Raguvaran : குறிப்பாக இவர் ரஜினியுடன் நடித்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிபட்ட ரகுவரன் கமலுடன் மட்டும் இணைந்து ஒரு படம் கூட பண்ணவே இல்லை இதை நினைத்து இன்று வரை ரசிகர்கள் வருத்தம் பட்டு வருகின்றனர். ரகுவரன் நடிகை ரோகிணியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ரிஷி என்ற ஒரு மகன் உள்ளார் இப்படி குடும்பம் சினிமா என வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த ரகுவரன் 2004 ஆம் ஆண்டு ரோகிணியை விவாகரத்து செய்தார் அதன் பிறகு தனியாக வாழ்ந்து வந்த ரகுவரன்  2008 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எழுதினார்.

ரோகிணி அவ்வப்போது ரகுவரனை பற்றி பேசுவது உண்டு அப்படி ஒரு தடவை எனக்கு ரகுவரன் வீட்டில் பாதுகாப்பு இல்லை வீட்டில் பல கொடுமைகள் நடந்தது. ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறினேன் என கூறினார்.  இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மீண்டும் ரகுவரனை பற்றி பேசி உள்ளார்.

எங்களுடைய மகன் ரிஷி பள்ளியில் சிறப்பாக திருக்குறள் கூறக்கூடிய ஒருவன் திருக்குறள் என்றாலே ரிஷியை தான் அழைப்பார்கள் ஒருமுறை எதர்ச்சியாக ரிஷியை பிக் அப் செய்ய பள்ளிக்கு சென்று இருந்தோம் ரிஷி திருக்குறள் கூறுவதைப் பார்த்துவிட்டு ரகுவரன் பிரமித்து போய்விட்டார். எவ்வளவு அழகாக திருக்குறள் சொல்கிறான் என் புள்ள என்று பூரித்து போனார்.

அப்படி தன்னுடைய மகனை பார்த்து ரசித்தார் ஆனால் தற்பொழுது ரிஷி செய்யும் விஷயங்கள் எல்லாம் பார்த்தால் இன்னும் ரசித்திருப்பார் சாதாரணமாக திருக்குறள் கூறியதை அவ்வளவு ரசித்தார் ரகு என்றால் ரிஷி இப்பொழுது செய்யும் விஷயத்தை எவ்வளவு ரசித்து இருப்பார் என்று அவ்வபோது யோசிப்பேன் என அதில் பதிவு செய்தார்.

Leave a Comment