எனக்கு ரொம்பவும் பிடித்த திரைப்படம் இதுதான் – லோகேஷ் வெளிப்படையான பேச்சு..

மக்கள் மற்றும் ரசிகர்கள் வித்தியாசமான திரைப்படங்களை எதிர்பார்க்கின்றனர். அதை நன்கு புரிந்து கொண்ட இளம் இயக்குனர்கள் தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வெற்றி கண்டு வருகின்றனர். அந்த வகையில்  இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை எடுத்த அனைத்து படங்களுமே வெற்றி படங்கள் தான்..

ஏன் கடைசியாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து இவர் எடுத்த விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக 410 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் உடன் கைகோர்த்து தளபதி 67 திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். அதற்கான பூஜைகள் கூட அண்மையில் போட்டு முடிந்தது.

இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கைதி  2, விக்ரம் 2 போன்ற படங்களை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் பற்றிய தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் சொன்னது என்னவென்றால்..

நான் திரும்பத் திரும்ப ஒரு படத்தை பார்த்தது என்றால் அது மலையாளத்தில் வெளியான ஐயப்பனும், கோஷியும் திரைப்படம் தான். அந்த படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய நினைத்தேன் என கூறினார் இதை கேட்ட ரசிகர் ஒருவர் இந்த படத்தை தமிழில்  ரீமேக் செய்கிறீர்கள் என்றால் அந்த இரண்டு கதாபாத்திரத்தில் யார் யாரை நடிக்க வைப்பீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த லோகேஷ் சூர்யா மற்றும் கார்த்தியை தான் நடிக்க வைப்பேன் என கூறினார். மேலும் பேசிய அவர் இது சம்பந்தமாக கார்த்தி மற்றும் சூர்யாவிடமும் பேசி எல்லாம் ரெடி செய்து வைத்திருந்தேன். ஆனால் ரைட்ஸ் வேறு எங்கேயோ போய்விட்டது என கூறிவிட்டார்கள் அதனால் அப்படியே டிராப் ஆகிவிட்டது என கூறினார்.

Leave a Comment