பிரபல நடிகர்களின் மகன்கள் பெரும்பாலும் ஹீரோவாக நடிக்கவே ஆசைப்படுவார்கள் ஆனால் அதில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட அவர்தான் அனிருத்.
3 திரைப்படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடர்ந்த அவருக்கு அடுத்தடுத்த டாப் ஹீரோக்களின் படங்களில் இசையமைக்க வாய்ப்புகள் கிடைத்ததால் துளியும் பயப்படாமல் தனது தனித்துவமான இசையின் மூலம் அத்தகைய ஜாம்பவான் படங்களுக்கு சிறப்பான இசை அமைத்து தனது பெயரை நிலைநாட்டினார்.
இதுவரை தனுஷ், விஜய், ரஜினி, அஜித் போன்ற பல ஜாம்பவான்கள் படங்களுக்கு இசையமைத்து உள்ளதால் அவரை புக் செய்ய தற்போது தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கியூவில் நிற்கின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் அட்லி ஹிந்தியில் டாப் நடிகரான ஷாருக்கானை வைத்து ஒரு புதிய படத்தை எடுக்க உள்ளார். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் சூப்பர் சிங்கர் செமி பைனல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்பொழுது அவருடன் பல விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்று உங்களின் ஃபேவரட் ஹீரோயின் யார் என்று கேட்டனர் அதற்கு அனிருத் சொல்லாமல் தன்னுடைய ஃபேவரிட் நடிகை நயன்தாரா என எழுதிக் காண்பித்தார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களின் ஃபேவரட் நடிகை இவராக இருப்பார் என நாங்கள் துளிகூட எதிர்பார்க்கவில்லை என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.