“எனிமி” படம் எனக்கு இப்படிதான் வந்தது உண்மையை சொன்ன நடிகர் ஆர்யா.! படகுழுவுக்கு நன்றி.

தமிழ் சினிமா உலகில் சிறந்த நண்பர்களாக நடிகர் ஆர்யாவும் விஷாலும் இருக்கின்றனர் இவர்கள் இருவரும் இணைந்து அவன் இவன் என்ற திரைப்படத்தில் இணைந்து தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றனர்.

அதை தொடர்ந்து தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் எனிமி என்ற திரைப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் முக்கிய கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து உள்ளனர். விஷால் தான் இந்த படத்திற்கு ஆர்யாவை போடுங்கள் செம்மையா செட் ஆவார் என கூறியுள்ளார்.

பின் திரைப்படக் குழு அவரை படத்தில் கமிட் செய்தது இந்த திரைப்படம் சில நாட்கள் முன்பு ஷூட்டிங் எடுக்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது இதில் ஆர்யா, விஷால், பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் போன்ற பல நட்சத்திர ஜாம்பவான்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மிக சுறுசுறுப்பாகவும் அதேசமயம் விறுவிறுப்பாகவும் நடைப்பெற்று உள்ளது.

எனிமி படம் குறித்து படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார் ஆர்யா கூறியது இந்த படத்தை எனக்கு கொடுத்த விஷாலுக்கு மிகப்பெரிய நன்றி.படத்தின் ஷூட்டிங்கின் போதும் எனக்கு நல்ல அனுபவத்தையும் அதேசமயம் என்ஜாய் பண்ணினேன்.

இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், எடிட்டர் ஆகியவர்களுக்கு நன்றி.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் அவருக்கும் நன்றி.மேலும் அவரது இசைக்காக தற்பொழுது காத்துக்கொண்டிருக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

இவரைப்போலவே இயக்குனராகும் சங்கரும் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஆர்யா சென்றுவிட்டார் அவரது ஒவ்வொரு நடிப்பையும் நான் பார்த்து ரசித்தேன் எனவும் கூறினார் இவர் இதற்கு முன்பு இரு முகன்,அரிமா நம்பி போன்றவை பல்வேறு படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment