அஜித்தின் மங்காத்தா படம் இப்படித்தான் உருவானது.! உண்மையை போட்டு உடைத்த இயக்குனர் வெங்கட்பிரபு.!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் தல அஜித்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படமும் வேற லெவல் ஹிட் கொடுப்பதால் அஜித் படத்திற்கு என ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

சமீபகாலமாக மக்களும் அரசியல் பிரமுகர்கள் விளையாட்டு வீரர்கள் தொடங்கி அனைவரையும் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டுகாக தொந்தரவு செய்து வருகின்றனர் என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம் .

வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஏங்கி  தவித்து கொண்டே இருக்கிறார்கள்.

மே மாதம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவரும் என போனி கபூர் அறிவித்ததையடுத்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித்திற்கு மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த வெங்கட்பிரபு சமீபத்திய பேட்டியில் மங்காத்தா படம் எப்படி உருவானது என்பதை கூறினார்.

ஒருநாள் வெங்கட்பிரபு காரில் சென்று கொண்டிருக்கும் போது போன் அழைத்தது யார் என்று தெரியாமல் போனை அட்டென்ட் செய்து பேசினார் அப்போது எதிர்முனையில் இருந்த நான் அஜித் பேசுகிறேன் என்றார்.

அஜித் வெங்கட் பிரபுவிடம் ஏதாவது ஸ்கிரிப்ட் இருக்க என்று கேட்டார்.

உடனே போனிலேயே வெங்கட்பிரபு படத்தின் முழுக்கதையையும் கூற அஜித் கேட்டுவிட்டு மிக சந்தோஷமடைந்து மிக சிறப்பாக இருக்கிறது.

எனது 50 திரைப்படத்தை நீங்கள் இயக்குவது தனக்கு பெருமையாக உள்ளது என அஜித் தெரிவித்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் அர்ஜூனுக்கு பதிலாக அந்த போலீஸ் கேரக்டரில் முதன்முதலில் நடிகை இருந்தது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா தானம். இதனையும் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார் வெங்கட்பிரபு.

Leave a Comment