படபிடிப்பு தளத்தில் MGR- ன் நடவடிக்கை இப்படி தான் இருக்குமாம்.! இப்ப இருக்கிற நடிகர்கள் யாருமோ அத பண்ணவே முடியாது.?

தற்போதைய காலகட்டத்தில் நடிகர்கள் தன்மையை தக்க வைத்துக் கொள்ளவும் சினிமாவில் முன்னேறவும் பலரும் தன்னால் முடிந்த உதவிகளையும் சினிமா பிரபலங்களை மதித்து நடப்பதால் அவர்களுக்கு சினிமாவைத் தாண்டி பேரும் புகழும் கிடைக்கிறது.

ஆனால் இதனை எல்லாம் பல வருடங்களுக்கு முன்பு செய்து காட்டியவர் தான் நடிகர் எம்ஜிஆர். திரை உலகில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் எம்ஜிஆர். அப்போதைய காலகட்டத்தில் எம்ஜிஆர் கண் அசைத்தால் போதும் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபங்கள் வருவதற்கு சில காரணங்கள் இருக்கிறது.

சினிமாவில் எப்பொழுதும் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவதோடு அவர்கள் எல்லோருக்கும் பாசத்தையும் காட்டக்கூடிய நடிகராக அப்போதைய காலகட்டத்தில் எம்ஜிஆர் இருந்தார். படத்தில் எப்படி மக்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்குவார் அதையேதான் நிஜத்திலும் கொடுத்தவர்.

எம் ஜி ஆர் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் திரைப்பட கலைஞர்கள் பலரும்  எவ்வளவு நாட்கள் ஷூட்டிங் எடுத்தாலும்  போனாலும் நடிப்பார்கள் அதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர் எப்படி இருக்கிறாரோ அதே போலவே மற்றவர்களும் அங்கு இருபவர்களும் சந்தோஷமாகவும் இருக்க முடியும் .

மேலும் சாப்பாடு விஷயத்திலும் சரி எம்ஜிஆர் என்ன சாப்பிடுகிறார்களோ அதேதான் நடிகர் நடிகைகளுக்கும் திரைப்பட கலைஞர்களுக்கும் அதேபோன்ற உணவையே வழங்குவார். எம்ஜிஆர் உடன் நடிக்கும் நடிகர் நடிகர்களுக்கும் பணியாற்றுபவர் வங்கும் சம்பளம் அதிகமாகவும் கொடுக்கப்படும் என்ற தகவலும் தற்பொழுது வெளிவருகின்றன.

மேலும் எம்ஜிஆர் வீட்டில் எப்பொழுதும் மக்களின் வரவேற்பும் சினிமா திரைப்பட பிரபலங்களின் வரவேற்பும் இருந்து கொண்டே இருப்பதால் அவரது வீட்டில் எப்பொழுதும் அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும் அவர்களது நல்ல உணவு வழங்கி கவனித்து விட்டுத்தான் அவர்களை வீட்டை விட்டே அனுப்புவாராம் அந்த மாதிரி நல்ல உள்ளம் கொண்டவராக இருந்ததார்.

இதனால் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் மிகவும் பிடித்துப்போனதால் நபராக மாறினார். இவரைப்போல சினிமா உலகில் தற்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தாலும் எம்ஜிஆரை அடிச்சிக்க ஆளே இல்லையா மக்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் பலரும் அடித்துக் கூறுகின்றனர்.

Leave a Comment