“எங்கேயும் எப்போதும்” படத்தில் நடிகை அனன்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகை தானாம்.? இப்போ வெளிவரும் உண்மை தகவல்.

சினிமா உலகை பொறுத்தவரை சாதாரண திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அந்த வகையில் புதுமுக இயக்குனரான சரவணன் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, சர்வா, அனன்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் எங்கேயும் எப்பொழுதும்.

இந்த திரைப்படம் 2011ம் ஆண்டு திரையரங்கில் வெளியானது. திரையரங்கை கைப்பற்றி இருந்தாலும் படம் சூப்பராக இருந்ததால் அதிக நாட்கள் ஓடியது. இப்படம் காதல் சம்பந்தப்பட்ட படம் என்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது இந்த படத்தில் ஜெய் அஞ்சலி ஜோடி சிறப்பாக இருந்தது மற்றும் சர்வா அனன்யா ஜோடியும் ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இயக்குனர் சரவணன் இந்த படத்தில் இந்த நடிகர்கள் நடித்திருந்தால் சிறப்பாக இருக்கும் என தேர்வு செய்துள்ளார். ஆனால் அவர்கள் கிடைக்காததற்கு பிறகுதான் சர்வா அனன்யா ஆகிய இருவரையும் தேர்ந்தெடுத்தாலும் அந்த வகையில் முதலில் இந்த படத்தில் நடிகை இருந்தது அமலாபால் மற்றும் விமல்தான்.

அவரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.ஆனால் அவர்கள் அப்பொழுது வேறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் கால்ஷீட் கிடைக்காத பிரச்சினை காரணமாக அவர்கள் நடிக்க முடியவில்லை. அதன்பிறகுதான் அந்த கதாபாத்திரத்தில் சர்வா அனன்யா நடித்து அசத்தினார்.

அதுபோல இந்த படத்திற்கு முதன் முதலில் இசையமைக்க தமிழைத்தான் தேர்வு செய்தனர் ஆனால் சில காரணங்களால் அவர் அதிலிருந்து வெளியேற பின் சத்தியா அந்த படத்தில் கமிட்டானார் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தாலும் படம் எதிர்பார்க்காத வெற்றியை இயக்குனர் சரவணன் கொடுத்திருந்தார்.

Leave a Comment