விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன்..! நடிகை ரம்யா பாண்டியன் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என குறிக்கோளாக இருந்து வருகிறாராம். இவ்வாறு பிரபலமான நமது நடிகை விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இவ்வாறு இந்த நிகழ்ச்சிகள் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக ஏகத்திற்கு ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் நடுவராக பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பிக் பாஸ் நான்காவது சீசனிலும் கலந்து கொண்ட நமது ரம்யா பாண்டியன் இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில் ஏமாற்றம் தான் மிச்சம்.

ஏனெனில் இந்த நிகழ்ச்சி மூலமாக ரம்யா பாண்டியன் உண்மை முகம் ரசிகர்களுக்கு தெரியவந்தது மட்டுமில்லாமல்.ரசிகர்கள் பலரும் இவரை விஷ பாட்டில் என அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் ரம்யா பாண்டியனிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது அதில் உங்களுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிடிக்குமா இல்லை குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிடிக்குமா என்று கேள்வி கேட்டுள்ளார்கள்.

ramyapandiyan-1
ramyapandiyan-1

அதற்கு நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் கலந்து கொண்டேன் ஆனால் இந்த நிகழ்ச்சி மூலமாக மிகவும் பாதிக்கப்பட்டதாக கூறி உள்ளார் மேலும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி எனக்கு ரொம்பவும் பிடிக்கும் இதில் ரசிகர்கள்  தங்களை வெறுப்பதற்கு  காரணமே இருக்காது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment