ரஜினியின் வெற்றி பாதைக்கு கொடு போட்டு கொடுத்தவர் இந்த இயக்குனர் தான்.! யாருடா அது.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் ரஜினி கிங்காக இருக்க முக்கிய காரணம் ஆரம்ப கால கட்டத்தில் இவர் நடித்த வெற்றிப் படங்களே காரணம் என கூறப்படுகிறது ஆனால் அதே சமயம்  இவர் பல்வேறு விதமான வெற்றி-தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார்.

ஒருகட்டத்தில் அதனை நன்கு சுதாரித்துக்கொண்ட ரஜினியும் இனிமே வருகின்ற படங்களில் கதையை நன்கு தேர்ந்தெடுத்து நடித்தால் மட்டுமே தன்னை மென்மேலும் முன்னேறி செல்லும் முடியும் என்பதை புரிந்து கொண்டார். அந்த வகையில் திறமை வாய்ந்த இயக்குனர்களுக்கு படங்களை அள்ளிக் கொடுத்தார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் 75 படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனரான எஸ்பி முத்துராமன் அவர்களுக்கு மட்டும் குறைந்தது 25 படங்களை கொடுத்துள்ளார். அவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் ரஜினிக்கு மாபெரும் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது வசூல் வேட்டையும் நடத்தின.

இதனால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை ரஜினியும் எஸ்பி முத்துராமன் அவர்களும் கைப்பற்றினர். தற்போதைய காலகட்டத்தில் ரஜினி நம்பர் ஒன் கிங்காக வலம் வர மிகப்பெரிய உதவியவர் எஸ்பி முத்துராமன்.

கண்ணுக்குத் தெரியாத நபரை கூட சினிமாவின் உச்சியில் வைத்து அழகு பார்ப்பது இயக்குனர்கள் தான் அந்த வகையில் கண்ணுக்கு தெரியாத ரஜினியை தற்போது உச்ச நட்சத்திரமாக வைத்து அழகு பார்த்து வருவதற்கு முக்கிய காரணமே இவர்தான் என கருதப்படுகிறது.

இவர் இல்லை என்றால் ரஜினி இந்த இடத்தை பிடித்து இருப்பார்கள் என்பது கேள்விக்குறிதான் அதற்கு ரஜினியை நாம் குறை கூற முடியாது அவரும் தனது கதைக்கு ஏற்றவாறு ஆதாரமான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதைக்கு உயிரோட்டம் கொடுத்தார் ரஜினி.

Leave a Comment