மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் ப்ரேமம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகை தான்.! இணையத்தில் வெளியான புதிய தகவல்.

மற்ற மொழி திரைப்படங்களையும் தமிழ் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்ப்பது உண்டு அதற்கு காரணம் தமிழில் எப்படி நிறைய ஹிட் திரைப்படங்கள் இயக்குகிறார்களோ அதேபோல் தான் மற்ற மொழி திரைப்படங்களையும் நன்றாக இயக்குகிறார்கள் அந்த வகையில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் தமிழில் 250 நாட்களுக்கும் மேல் ஓடி பல சாதனைகளைப் படைத்தது இந்த திரைப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா, மடோனா போன்ற ஒருநட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருந்தார்கள் மேலும் இதில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சாய்பல்லவி ஆம் இவர் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.

சாய்பல்லவி தமிழில் நடித்தாலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற மாட்டார் என அனைவரும் கூறிய நிலையில் இவர் மலையாளத்தில் நடித்து மிகவும் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி விட்டார் மேலும் இந்த திரைப்படத்தில் இருந்து தான் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

sai pallavi
sai pallavi

ஆம் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் முதலில் நடிகை அசின் தான் நடித்திருக்க வேண்டுமாம் ஆனால் அவரை நெருங்க முடியாமல்.

படக்குழு சாய்பல்லவியை நடிக்க வைத்ததாக இந்த தகவல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் நடித்திருந்தாலும் படம் ஹிட்டாகி விடுமென கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment