கார்த்தி நடித்த வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது இந்த நடிகரா.? அட இது தெரியாம போச்சே.!

பல வருட கனவாக இருந்தது பொன்னியின் செல்வன் கதை இதை எப்படியாக திரைப்படமாக எடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பல வருடம் போராடி தற்பொழுது தான் மணிரத்னம் அவர்கள் இந்த திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக முதல் பாகத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பல பிரபலங்களும் இயக்குனர் மணிரத்னம் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.அந்த வகையில் பார்த்தால் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

என்பதால் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தற்பொழுதே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை தொடங்கி விட்டாராம் மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நடிகர் கார்த்தி நடித்த வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகர் தான் நடிக்க இருந்தார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஆம் யார் அந்த நடிகர் என்று கேட்டால் வேறு யாரும் இல்லை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் கார்த்தி நடித்த வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமாம் ஆனால் அப்பொழுது விஜய் சேதுபதி வருடத்திற்கு நிறைய திரைப்படங்கள் நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் இந்த திரைப்படத்திற்கு கால்ஷீட் தர முடியவில்லை அதனால்தான் இந்த திரைப்படத்தில் கார்த்தி வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூற படுகிறது.

vijay sethupathi
vijay sethupathi

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு நடைபெற வேண்டுமாம் பட்ஜெட் பிராப்ளம் மட்டுமல்லாமல் லொகேஷன் எதுவும் சரியாக அமையவில்லையாம் இதனால் தான் படம் கொஞ்சம் தாமதமாக வந்துள்ளது எனவும் பல பிரபலங்களும் கூறியதாக இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment