பலமுறை முயற்சி செய்தும் என்னால் அம்மாவாக முடியவில்லை. கள்ளக்காதலனை திருப்திபடுத்த 25 வயது இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு.!

திருப்பூருக்கு அருகே உள்ள சிங்காரப்பேட்டை மொசலிகொட்டாய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரோசின் சுல்தானா. இவர் தன்னுடைய மூன்றாவது பிரசவத்திற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது இந்த நிலையில் காலை 9 மணி அளவில் பர்தா அணிந்த பெண் ஒருவர் சுல்தானா வார்டில் நுழைந்துள்ளார்.

அங்கு அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார் அந்த பர்தா அணிந்த பெண். சுல்தானிடம் பர்தா அணிந்த பெண் என்னுடைய அக்காவும் இங்கேதான் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது அவர்மேல் வார்டில் அனுமதிக்கப்பட்டுளளார், அவளுக்கு ஆண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் உங்கள் குழந்தையை கொடுத்தால் நான் சிறிது நேரம் அக்காவிடம் காட்டிக்கொண்டு வந்துவிடுவேன் என கேட்டுள்ளார்.

பர்தா அணிந்த பெண்ணின் பேச்சில் மயங்கிய சுல்தானா தனது ஆண் குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார், குழந்தையை எடுத்துச் சென்ற பர்தா அணிந்த பெண் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அதிர்ச்சியடைந்தார் சுல்தானா அதனால் மருத்துவரிடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார், இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் போலீசாரிடம் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த போலீசார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தார்கள்.

ஆனால் அவர் பர்தா அணிந்து இருந்ததால் யார் என்று சரியாக தெரியவில்லை ஆனால் குழந்தையை தூக்கிக் கொண்டு செல்லும் வீடியோ காட்சி அதில் பதிவானதால் விசாரணையை மேலும் தீவிர படுத்தினார்கள் இதன் மூலம் பர்தா அணிந்த அந்த பெண் திருப்பத்தூர் தேவாங்கர் நகரை சேர்ந்தவர், இவருக்கு வயது 25 நஹானா  என்பது அவரின் பெயர் என தெரியவந்தது  இதன் காரணமாக அவரது வீட்டிற்குள் போலீசார் சோதனை நடத்தினார்கள் அப்போது துணிக்கு அடியில் குழந்தையை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.

உடனடியாக நகானாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற் கொண்டார்கள் அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, இவருக்கு ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகிவிட்டது ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தான் வசிக்கும் அதே பகுதியில் இருக்கும் ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது அப்பொழுது அவருடன் வாழ்ந்து வருகிறார் ஆனால் இவர் கர்ப்பமடையாத காரணத்தினால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக ஏதாவது ஒரு குழந்தையை கடத்தி தன்னுடைய காதலனுக்கு பிறந்தது என கூறி நம்ப வைத்து விடலாம் அதனால் அவர் திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் தான் 6 மாதகாலமாக கர்ப்பமாக இருப்பதாக பொய் கூறி வந்துள்ளார்.

பிறகு பிரசவ வலி வந்ததாகவும் அதனால் மருத்துவமனைக்கு செல்வதாகவும் தன்னுடைய மாஜி காதலனை நம்ப வைத்துள்ளார், பிறகு மருத்துவமனைக்கு வந்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தையைப் பார்த்ததும் அதை எப்படியாவது கடத்தி வந்து வளர்க்க வேண்டும் என முடிவு செய்து அதனால் தான் இந்த குழந்தையை கடத்தினேன் என போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment