படம் ரிலீஸ் ஆகும் வரை இவங்க தொல்லை தாங்க முடியாது.! கார்த்திக் திரிஷாவை மீம்ஸ் போட்டு கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் கார்த்தி மற்றும் திரிஷா இதில் நடிகர் கார்த்தி அவர்கள் தற்போது ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதனை தொடர்ந்து நடிகை திரிஷா அவர்கள் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து கார்த்தி மற்றும் திரிஷா இருவருமே சேர்ந்து நடித்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கத்தில் உருவாகி இருந்த நிலையில் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் படகுழு ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தது அதாவது நடிகை திரிஷா அவர்கள் கையில் வாலை ஏந்தி கொண்டு நிற்கும் படியாகவும் கார்த்தி அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு மண்டியிட்டு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தது அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் முதல் பாடலையும் அறிவித்து இருந்தது.

அந்த வகையில் நேற்று கார்த்திக்கும் திரிஷாவிற்கும் இடையே இருக்கும் காதலை பற்றிய அக நக பாடல் நேற்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி மற்றும் திரிஷா இருவதும் டுவிட்டர் பக்கத்தில் மெசேஜ் பகிர்ந்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்த பிரபல விமர்ச்சகர் ப்ளூ சட்டை மாறன் அவர்கள் ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.

அதாவது கார்த்தி அவர்கள் “இளையபிராட்டி..hi என்றும் த்ரிஷா என்ன வாணர்குல இளவரசே..” என்று இருவரும் மாறி மாறி ட்விட் போட்டுகொண்டனர். இந்த ட்விட்டை பார்த்த ப்ளூ சட்டை மாறன் ஐயோ ராமா இவங்க தொல்ல படம் ரிலீஸ் ஆகும் வரை தாங்க முடியாது என்று கலாய்த்து இருக்கிறார் இவருடைய இந்த ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment