என்னை ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட வைத்து அசிங்கப்படுத்தி விட்டார்கள்!! கதறும் இளம் நடிகை.

வழக்கு எண் 18 கீழ் 9 என்ற திரைப்படத்தின் மூலம் 12 வகுப்பு படிக்கும் மாணவியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை மனிஷா யாதவ். இவர் ஒரு பேட்டியில் என்னை ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட வைத்து அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்று குமரி இருந்தார்.

இவர் பல படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு போட்டியில் சென்னை 28 பார்ட் 2வில் எனக்கு பெரிய பேட் எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்தது என்று கூறியுள்ளார்.

அது என்னவென்றால் இந்த படத்தை பற்றி என்னிடம் கூறும்பொழுது முக்கிய கதாபாத்திரமே நீங்கள் தான் என்று கூறியிருந்தார்கள் உங்களுக்கு சில கேரக்டர்ஸ் இந்த படத்தில் உள்ளது என்றும் கூறினார்கள். ஆனால் கடைசியில் என சொப்பன சுந்தரி பாடலுக்கு டான்ஸ் ஆட வைத்து விட்டார்கள் என்று கூறி புலம்பி வருகிறார்.

இதன் காரணமாகத் தான் தமிழ் சினிமாவில் இருந்து நான் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் கொஞ்சம் தள்ளி இருந்தேன் என்றும் கூறியிருந்தார். இவ்வாறு நான் இனிமேல் தமிழ் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டு போன அம்மணிக்கு தற்பொழுது நல்ல கேரக்டரில் அமைந்த படம் தான் ஒரு குப்பை கதை. இப்படத்திற்குப் பிறகு தான் தமிழ் சினிமாவில் எட்டிப்பார்த்தார் மனிஷா யாதவ்.

இந்த நிலையில் ரசிகர்கள் இனிமேல் தமிழ் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக நல்ல கேரக்டர் கிடைத்தால் நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். ஆனால் மறுபடியும் ஐட்டம் டான்ஸ் அட  கூப்பிட்டால் எந்த ஒரு படத்திலும் நடிக்க மாட்டேன் என்றும், உங்களுக்கு தான் கல்யாணம் ஆகிவிட்டது இனிமேல் எப்படி கவர்ச்சியில் நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு பல முன்னணி நடிகைகள் திருமணம் செய்து கொண்டு நடிக்கவில்லையா உதாரணமாக சமந்தாவை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதை மாதிரி நானும் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment