நான் பேசினாலே சிரிக்கிறாங்க.. அவமானத்தில் கூனிக்குறுகி நின்ற நடிகை ஹன்ஷிகா..!

hanshika : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வருபவர் ஹன்சிகா. இவர் முதலில் ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயின்னாக நடித்து வந்தார் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் நடித்து அறிமுகமானார்.

முதல் படமே தமிழில் வெற்றி படமாக மாறியதை எடுத்து அடுத்ததாக ஜெயம் ரவி உடன் எங்கேயும் காதல், விஜய் உடன் வேலாயுதம், ஆரி உடன் சேட்டை, சூர்யாவுடன் சிங்கம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்ற பெயரையும் பெற்றார்.

மேலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கினார்கள் இப்படிப்பட்ட நடிகை ஹன்சிகா தனது 50 வது படமான மஹா படத்திற்கு பிறகு பிரபல தொழிலதிபரான sohail khaturiya என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் சில மாதங்கள் நடிக்காமல் இருந்த ஹன்சிகா மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஹன்ஷிகா பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நீங்கள் தமிழ் சினிமாவிற்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் தமிழ் சரியாக பேசுவதில்லை என கேள்வி கேட்டு இருக்கிறார்கள் இதற்கு பதில் அளித்த ஹன்சிகா நான் தமிழில் பேசினால் செட்டில் உள்ள அனைவரும் சிரிப்பார்கள்.

அதனால் நான் பேசுவதில்லை.. சொல்லி தரும் வசனத்தை மட்டுமே ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசுவேன். தமிழ் ஓரளவு நன்றாகவே பேசுவேன் ஆனால் மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்பதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்து உள்ளேன் என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment