சாமி சத்தியமா அது நான் இல்லைங்க கார்த்திக் நரேன் கதறல்.? இதோ அவரே வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக அறிமுகமாகியவர் கார்த்திக் நரேன், இவர் முதன்முதலில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இதனை தொடர்ந்து அடுத்ததாக அரவிந்த்சாமி அவர்களை வைத்து நரகாசுரன் திரைப்படத்தை இயக்கினார்.

ஆனால் இந்த திரைப்படம் இதுவரை இன்னும் திரைக்கு வரவில்லை படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கவுதம் வாசுதேவ மேனன் படத்திலிருந்து விலகிவிட்டார், இப்படி சில பிரச்சனைகளால் தான் இன்னும் நரகாசுரன் திரைப்படம் வெளியாகமால் இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அருண் விஜய்யை வைத்து மாபியா என்ற திரைப்படத்தை இயக்கினார் கார்த்திக் நரேன். இந்த நிலையில் தற்போது கார்த்திக் நரேன் தனுஷை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார், இப்படி இருக்கும் நிலையில் கார்த்திக் நரேன் தன்னுடைய சமூக வலைதளத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் அதில் எனது புதிய படத்தில் நான் நடிக்க வைப்பதாக கூறி என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி பொய்யான தகவல்களை பரப்பி பணம் கேட்டு வருகிறார்கள்.

அதனால் உங்களுக்கு 9 777017 348 என்ற தொலைபேசி நம்பரிலிருந்து இதுபோல் தகவல் வந்தால் உடனடியாக பிளாக் செய்யவும், குற்றம் செய்பவர்களை நரகத்தில் எறிக்கப்படுவார் என கூறியுள்ளார்.

karthik naren
karthik naren

Leave a Comment