விஜய் டிவியில் இந்த இரண்டு மெகா ஹிட் சீரியல்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.? ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சமீபகாலமாக விஜய் தொலைக்காட்சியில் படத்தின் தலைப்பை சீரியல் டைட்டிலாக வைத்து ஒளிபரப்பு அதில் வெற்றி கண்டு வருகிறார்கள். அந்த வகையில் ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், தேன்மொழி நாம்இருவர்நமக்குஇருவர், என பல சீரியலின் தலைப்புகள் படத்தின் தலைப்பை தான்  வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் மெகா ஹிட் சீரியல் தற்காலிகமாக நிறுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை மற்ற துறைகளை விட சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பணியாளர்களை தான் அதிகம் பாதித்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய பொழுது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது அதனால் ஆறு மாதத்திற்கு மேல் படப்பிடிப்பு மற்றும் சீரியல் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டது.

pandiyan store

அதனால் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வந்த அனைத்து சீரியல்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனால் பல தொலைக்காட்சிகள் பழைய சீரியல்களையும் பழைய எபிசோடுகளையும் ஒளிபரப்பும் வந்தார்கள். இந்த நிலையில் தற்போது கொரோனா  இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது அதனால் வெள்ளித்திரை படப்பிடிப்புகளும் சின்னத்திரை படைப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொலைக்காட்சிகள் ஏற்கனவே எடுத்த படப்பிடிப்புகளை வைத்து எபிசோடுகளை ஒப்பேற்றி வந்தார்கள். இந்த நிலையில் பழைய எபிசோடுகள் முடிவடையும் நிலையில் இருப்பதால் மீண்டும் புதிய எபிசோடுகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மீண்டும் சீரியல் தற்காலிகமாக நிறுத்துவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜாராணி 2 ஆகிய தொடர்கள் நிறுத்துவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் விஜய் தொலைக்காட்சி சீரியல் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள்.

raja rani

Leave a Comment

Exit mobile version