T20 உலக கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணியில் இந்த மூன்று வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் – முன்னாள் வீரர் பேச்சு.!

வருகின்ற T20 உலக கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இளம் வீரர்கள் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தடுப்பு ஆட்டக்காரரான வி வி எஸ் லட்சுமணன் கூறிஉள்ளார்.

இந்திய அணி பல சிறப்பான பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன்களை தன்வசப்படுத்தி இருந்தாலும் இளம் வீரர்களுக்கும் மற்றும்  பழைய வீரர்களுக்கும் பல வாய்ப்புகளை வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார் அதிலும் குறிப்பாக இந்த மூன்று வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் அவர் கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறியது : ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வந்த  சகல் மற்றும் குல்தீப் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்புகள் கொடுத்தால் சரியாக பயன்படுத்தி தனது பழைய பார்வை திரும்பப் பெறுவதோடு எதிரணி வீரர்களுக்கு நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என கூறினார்.

அவர்களைப்போலவே சூரியகுமார் யாதவும் வருகின்ற போட்டியில்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவர் அவர் 3-வது இடத்தில் களம் கண்டால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான பல போட்டிகளில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கட்டியும் உள்ளார்.

அதுபோல உலக கோப்பை T20 தொடரிலும் இவர் தனது திறமையை நிரூபிக்க அதிக வாய்ப்புகள் அவருக்கு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் வி வி வி எஸ் லட்சுமணன்.

Leave a Comment