ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி குறிவைக்கும் வீரர்கள் இவர்கள் தான்.? தட்டி தூங்க ரெடியாக இருக்கிறதாம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன் சீன்னாக நடத்தப்பட்டு வருகிறது 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 15 வது சீசன் அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பாக 15வது சீசனில் இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது அதனை கருத்தில் கொண்டு இதற்கு முன்பு இருந்த 8 அணிகளும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

இதனை அடுத்து ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா, தோனி, அலி, ருத்துராஜ்  ஆகியவர்களை தக்க வைத்துக் கொண்டது. மற்ற வீரர்களை ரிலீஸ் செய்து உள்ளது சிஎஸ்கே அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் இருந்துள்ளனர்.

ஆனால் 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஜனவரி மாதம் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி யாரை வாங்கும் என்பது மிகப் பெரிய குழப்பமாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. அதாவது சென்னை அணி எந்தந்த வீரர்களை வாங்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலாவதாக ஷிகர் தவானை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் பந்துவீச்சாளர்களுக்கு ஏதுவான மைதானத்தில் கூட ஷிகர் தவான்னால் ரன் வேட்டையை நடத்த முடியும் என்ற காரணத்தினால் அவரை எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அவரைத் தொடர்ந்து தமிழக வீரர் அஸ்வினை குறி வைத்துள்ளது. மேலும் வாஷிங்டன் சுந்தரரையும் கைப்பற்றும் என தெரியவந்து உள்ளது ஏனென்றால் சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏதுவான மைதானம் என்பதால் இந்த இரண்டு வீரர்களும் குறிப்பாக தூக்கம் என தெரியவந்துள்ளது. ஆல்ரவுண்டர் பொருத்தவரை ஷாருக்கானுக்கு அதிக வாய்ப்புகள் காட்டும் என தெரியவருகிறது. ஏனென்றால் சமீபகாலமாக ஷாருக்கானின் ஆட்டம் வேற லெவல் இருக்கிறது என்ற காரணத்தினால் அவரை குறிவைக்கும் என தெரியவருகிறது.

Leave a Comment