சினிமா உலகில் எனக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்தவர்கள் இவர்கள் தான்.! மனம் திறந்த ராகவா லாரன்ஸ்.

சினிமா உலகில் நடன இயக்குனராக கால்பதித்து பின்னாட்களில் ஹீரோவாக மாறி வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் ஹீரோவாக மட்டுமலலாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் மேலும் பணிபுரிந்து தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகிறார்.

சினிமா உலகில் ஆரம்பத்திலிரந்து தற்பொழுது வரையுலும் தனது கடினமான உழைப்பை வெளிப்படுத்தி வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் தமிழ் சினிமாவில் வளர பல முன்னணி நடிகர்கள் இவருக்கு உதவி உள்ளனர்.இவர் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு அத்தகைய படங்கள் பிரபலமடையவில்லை இருப்பினும் தனது விடா முயற்சியின் மூலம் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

vijay

அந்த வகையில் இவர் முனி திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை ருசித்தார். இதனை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்த பாகங்களை எடுத்து தமிழ் சினிமா உலகில் வசூல் வேட்டை நடத்தினார். அந்த வகையில் இவர் காஞ்சனா 1, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற அடுத்த பாகத்தை எடுத்து நடித்து தற்போது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது அதில் அவர் கூறியது நான் திரையுலகில் வளர உதவியாக இருந்தவர் தளபதி விஜய். திரை உலகில் எனக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்துள்ளார் மேலும் சிரஞ்சீவி ,நாகார்ஜுனா போன்ற பல நடிகர்கள் தான் நான் வளர்வதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.

இவர்கள் இல்லையென்றால் தற்போது சினிமா உலகில் நான் வளர்ந்திருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Exit mobile version