சென்னை அணி தக்க வைத்துக்கொள்ள போகும் முதல் நான்கு இவர்கள் தான்.? தோனிக்கு அடுத்து இவர் தான் கேப்டன் – நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கணிப்பு.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டியை 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 15 வது கட்ட சீசன் அடுத்த வருடம் விரைவிலேயே தொடங்கி இருக்கிறது அதற்கு முன்பாக பிசிசிஐ புதிய கட்டளைகளை போட்டுள்ளது ஏற்கனவே இதுவரை 8 அணிகள் மோதிய நிலையில் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்ட மொத்தம் 10 அணிகள் அடுத்த ஐபிஎல் போட்டிகளில் விளையாட இருக்கின்றன.

இதனை அடுத்து ஒவ்வொரு அணியும் சுமார் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் மீதி வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டது இதனையடுத்து சென்னை, மும்பை போன்ற பணிகளில் சிறந்து 4 வீரர்களை தக்க வைக்க முடிவு செய்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சென்னை அணி.

முதலில் இந்த நான்கு வீரர்கள் தான் தக்க வைக்க முயற்சி செய்யும் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சைமன் டவுல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த நான்கு வீரர்களை தான் தக்கவைத்துக்கொள்ளும் என அடித்துக் கூறியுள்ளார் அந்த நான்கு வீரர்கள் வேறுயாருமல்ல தோனி, ரவிந்திர ஜடேஜா, டு பிளேசிஸ், கெய்க்வாட் போன்றவர்களை தான் தக்க வைக்கும் என அவர் கூறியுள்ளார்.

அதிலும் குறிப்பாக டு பிளேசிஸ் தக்க வைக்கும் என அடித்துக் கூறினார் காரணமும் இந்த சீசன்னில் தோனி முழுவதும் விளையாடுவதில்லை அவர் சென்னையில் விளையாடும் போட்டியை அவருக்கு கடைசி போட்டியாக அமைய இருப்பதால் அந்த போட்டிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டு பிளேசிஸ் செயல்படுவார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பன் பதான்  சென்னை அணி சாம் கரண் அல்லது மொயின் அலி தான் தக்க வைப்பார் என அடித்து அவர் கூறியுள்ளார் இருப்பினும் சென்னை அணி யாரை தேர்ந்தெடுக்கும் என்பது ஒரு மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

Leave a Comment