தமிழக வீரர் அஸ்வினுக்கு பிடித்த 3 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான் – அதிலும் இந்த வீரர் ரொம்ப சின்ன பையன்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டர் ஆக திகழ்ந்து வருபவர் அஸ்வின். சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாடி வந்த இவர் ரோகித் சர்மா 20 ஓவர் கிரிக்கெட் பார்மட்டில் கேப்டன் பொறுப்பை எடுத்தவுடனேயே  தமிழக வீரர் அஸ்வினை 20 ஓவர் மற்றும் அடுத்ததாக ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட வைக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்,

இதனால் அஷ்வின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் பாகிஸ்தான் அணியில் உங்களுக்கு யார் யாரை பிடிக்கும் என கேட்டதற்கு மூன்று வீரர்களை பிடிக்கும் என அவர் கூறியுள்ளார் முதலாவதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறினார்.

ஏனென்றால் அவரது ஆட்டம் தனித்துவமாக இருக்கும் மேலும் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் 100 ரன்களை சிறப்பாக அடித்து அசத்தினார்.அடுத்ததாக எனக்கு பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான முஹம்மது ரிஸ்வான் பிடிக்கும் அவர்கள் ஆட்டம் மிக நேர்த்தியாக இருக்கும்.

அவர் தனது பேட்டியின் மூலம் மற்றவர்களை பேச வைக்கிறார் அவரது ஆட்டத்தில் நுணுக்கம் சிறப்பாக இருப்பதாக சொன்னார். மூன்றாவதாக எனக்கு பிடித்த வீரர் என்றால் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி பிடிக்கும் என கூறியுள்ளார்.

அவரது பந்துவீச்சு சிறப்பாக இருப்பதோடு  சூழலுக்கு  ஏற்றார் போல விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.மேலும் இளம்வயதிலேயே பாகிஸ்தான் அணிக்காக விளையாடுகிறார். மேலும் நல்ல அனுபவமும் சிறந்த டெக்னிக் அவரிடம் இருப்பதாகவும் கூறி இந்த மூவரையும் பற்றி பேசி உள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment