என் மேல எந்த தப்பும் இல்ல.. விஜய் டிவி பார்த்த எடிட் வேலை தான்.? ரசிகர்களிடம் உண்மையை சொன்ன பிக்பாஸ் பாவணி.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அண்மையில் தான் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் நிறைவு பெற்றது. இந்த ஐந்தாவது சீசனில் வெவ்வேறு துறையில் இருந்து 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதிலும் முதல் முறையாக இந்த சீசனில் திருநங்கை நமிதா மாரிமுத்து கலந்துகொண்டார்.

ஆனால் அவர் சில காரணங்களால் நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டு வாரங்களிலேயே வெளியேறிவிட்டார். மேலும் வைல்டு கார்ட்டு என்ட்ரியாக மூன்று பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மொத்தம் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் பிக் பாஸ் சீசன் 5 பைனலில் ராஜு முதலிடத்தைப் பிடித்து ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள பரிசுத் தொகையும் பெற்றுள்ளார்.

மேலும் அவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் பிரியங்கா, பவானி உள்ளனர். தற்போது ஷோ முடிந்து போட்டியாளர்கள் பலரும் யூடியூபில் இன்டர்வியூ கொடுத்து வருகின்றனர். மேலும் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களிடையே லைவில் உரையாடி வருகின்றன. அந்த வகையில் பாவணி அவரது ரசிகர்களிடையே உரையாடியபோது ரசிகர் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் நீங்கள் இருக்கும்பொழுது பாவணி அபினை பற்றி குறும்படம் ஒன்று வெளியாகியது அதைப்பற்றி கேட்டுள்ளார்.

அதற்கு பாவணி அந்த வீடியோவில் சில எடிட் செய்து விட்டனர் எனவும் நான் அபிநய்யை பிடிக்காது என சொன்னதற்கும் அதற்கு முன்பான வார்த்தைகளையும் பின்னர் இருக்கும் வார்த்தைகளையும் எடிட் செய்து விட்டனர் என பாவணி தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியின் மீது பாவணி இப்படி ஒரு குற்றச்சாட்டு வைத்திருந்தது போல் முதல் சீசனில் ஜூலியும் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார் அது நம்ம எல்லாருக்கும் தெரியும் ‘அந்த 5 செகண்ட் முன்னாடி இருக்கும் காட்சியை போட சொல்லுங்க’ என ஜூலி கேட்டார். என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment