மாரி செல்வராஜ் வீட்டில் சாமி போட்டோவே கிடையாது.? ஆனால் அந்த புகைப்படம் நிறைய இருக்கு.! வெளிவந்த ஷாக்கிங் நியூஸ்

maari selvaraj
maari selvaraj

இளம் இயக்குனர்கள் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கின்றனர். அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை தொடர்ந்து உதயநிதியுடன் கைகோர்த்து உருவாக்கிய திரைப்படம் “மாமன்னன்”.

இந்த படத்தில் மேலும் வடிவேலு, பகத் பாஸில், ரவீனா ரவி, கீர்த்தி சுரேஷ் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். மாமன்னன் படம் முழுக்க முழுக்க எமோஷனல், ஆக்சன் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் அனைவரது மத்தியிலும் கைத்தட்டல் வாங்கியதோடு மட்டுமல்லாமல் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனால் மாமன்னன் திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் வெற்றி நடை கண்டு வருகிறது. இதனால் மாமன்னன் திரைப்படம் சுமார் 40 கோடிக்கு மேல் வசூல் அளவில் உள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

அண்மையில் மாமன்னன் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியதை தொடர்ந்து உதயநிதி மாரி செல்வராஜ்க்கு “மினி கூப்பர்” கார் ஒன்றை வழங்கினார் அதன் மதிப்பு கூட 55 லட்சம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் குறித்து ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.

அதாவது மாரி செல்வராஜ் வீட்டில் பூஜை அறை கிடையாதாம்.. மாறாக அவரது வீட்டில் பன்றிகளின் போட்டோக்கள் தான் அதிகம் இருக்குமாம்.. ஒரு தடவை உதயநிதி மாரி செல்வராஜ் வீட்டிற்கு சென்று உள்ளார்.  என்ன சார் நிறைய பன்றிகள் போட்டோவை வச்சிருக்கீங்க.. என கேட்டதற்கு மாரி செல்வராஜ் சொன்னது என்னவென்றால்.. எனக்கு பன்றிகள் தான் ரொம்ப பிடிக்கும் என கூறினாராம்..