அஜித்தின் பில்லா 2 படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசன் குழந்தைகளுக்கு உதவி செய்த பிரபல நடிகர்.! நெகிழவைக்கும் சம்பவம்

சமீப காலமாகவே சினிமா துறையில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த பல நடிகர்கள் உடல்நலக் குறைவால் இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார்கள் அந்த வகையில் முதலில் தீப்பெட்டி கணேசன் கடந்த திங்களன்று உயிரிழந்தார்.

தீப்பெட்டி கணேசன் ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அதனைத் தொடர்ந்து அஜித்தின் பில்லா 2 திரை படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கினார் அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

கொரோனா காலகட்டத்தில் பால் வாங்க கூட என்னிடம் காசு இல்லை என்று கூறி பலரிடம் உதவி கேட்டார் அவர்களும் இவருக்கு உதவி செய்தார்கள் இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீப்பெட்டி கணேசன் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி மார்ச் 22ஆம் தேதி திங்களன்று இந்த உலகை விட்டு மறைந்துவிட்டார் இவரது இழப்பு தாங்க முடியாமல் சினிமா துறையில் இருந்த பல சினிமா பிரபலங்களும் இவருக்கு இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

மேலும் தீப்பெட்டி கணேசனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் ஒரு தகவலை கூறியுள்ளாராம்.

அதில் நடிகர் தீப்பெட்டி கணேசன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் எனக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது இந்த வருடம் அவரது பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் பார்த்தேன் அவர் இல்லை என்றாலும் என்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு நான் செய்வேன் என்று கூறியுள்ளாராம்.

மேலும் இந்த தகவல் தற்பொழுது ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Raghava Lawrence
Raghava Lawrence

Leave a Comment