கமலுக்காக பார்த்து பார்த்து உருவாக்கப்பட்ட கதையில் நடித்த இளம் ஹீரோ.! படம் வெளிவந்து என்ன ஆனது தெரியுமா.?

உலக நாயகன் கமலஹாசன் தனது திரை பயணத்தில் எத்தனையோ வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் அதில் ஒன்றாக கடைசியாக நடித்த விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது. அதனை தொடர்ந்து  இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார்.

அதை முடித்துவிட்டு மணிரத்தினத்துடன் ஒரு படம்.. ஹச். வினோத்துடன் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார். இப்படிப்பட்ட நடிகர் கமலஹாசன் எப்பொழுதுமே நல்ல கதைகள் உள்ள படங்களை தவற விடமாட்டார் ஆனால் ஒரு சில நல்ல படங்களை தவற விட்டு இருக்கிறார்.

அந்த வகையில் கமல்  தவற விட கதை இளம் நடிகர் ஒருவர் நடித்து பேரையும், புகழையும் பெற்றார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. இந்த நடிகர் வேறு யாரும் அல்ல நடிகர் ஜீவா தான் ஆரம்பத்தில் காதல் கலந்த படங்களில் நடித்த பிரபலமானார் தித்திக்குதே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சமயத்தில் இயக்குனர் ராம்..

கற்றது தமிழ் திரைப்படத்தின் கதை எழுதி வந்தார் இந்த கதை கமலஹாசனுக்கான ஒரு படம் என முடிவு செய்து இருந்தாராம் ஆனால் அப்பொழுது கமலஹாசனிடம் வாய்ப்பு கேட்பது மிகக் கடினமான காரியமாக இருந்ததாம்.. இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்து கேள்விப்பட்ட நடிகர் ஜீவா அதில் நடிகர் விரும்பினார்.

ஆனால் இயக்குனர் ராமிற்கு விருப்பமில்லை ஏனென்றால் ஜீவா தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வருவதால் இந்த கதை அவருக்கு செட்டாகாது என நினைத்தார் ஆனால் ஜீவா கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக பொருந்தி நடித்தார்  இப்படி உருவான திரைப்படம் தான் கற்றது தமிழ் இந்த திரைப்படம் ஜீவாவிற்கு மிக முக்கியமான திரைப்படமாகும்.

Leave a Comment