ரஜினி பட வாய்ப்பு எனக்கு முக்கியமில்லை.. காசு தான் வேண்டும்.! ஜெயிலர் படத்தை நிராகரித்த இளம் நடிகை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறிய இடைவெளிக்கு பிறகு நெல்சன் உடன் முதல் முறையாக கைகோர்த்து நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் இந்த படம் ரஜினிக்கு 169 திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த படம் ஒரு ஜெயில் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினி வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜெயிலர் படத்தின் சூட்டிங் தற்போது சென்னை மற்றும் மும்பை புதிய பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். மேலும் தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜெயிலர் படத்தின் கதைக்கு ஏற்றவாறு இன்னும் சில முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் கமிட் ஆகலாம் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி பட வாய்ப்பு வேண்டாம் என ஒரு நடிகை உதறி தள்ளி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். அந்த நடிகை வேறு யாரும் அல்ல பிரியங்கா அருள் மோகன் தான்.

இவர் இதுவரை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்துள்ளார் குறிப்பாக தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்தார் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதுவும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க  ரஜினியும் ஓகே சொல்லினாராம்.

ஆனால் பிரியங்கா மோகன் ரஜினி படத்தில் நடிப்பது மிகப்பெரிய ஒரு விஷயம் தான் ஆனால் எனக்கு மிகப்பெரிய ஒரு தொகை வேண்டும் என கேட்டு இருக்கிறார்.. தெலுங்கில் எனக்கு ஆறு படங்கள் இருக்கிறது சம்பளம் அதிகமாக கொடுத்தால் இந்த படத்தில் நடிப்பேன் இல்லை என்றால் வேறு ஹீரோயின்களை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டாராம்.

Leave a Comment

Exit mobile version