தாமரை செல்விக்கு விலையுர்ந்த பொட்ருகளை வாங்கி தந்த இளம் நடிகர் – “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் சொன்ன உண்மை சம்பவம்.!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலம் ஆனவர் தாமரைச்செல்வி. தற்போது இவர் ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

தாமரைச்செல்வி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் மேலும் வறுமையின் காரணமாக இளம் வயதிலேயே நாடக துறையில் சேர்ந்துள்ளார். அந்தவகையில் மேடை நாடகங்களில் கலந்துகொண்டு படிப்படியாக உயர்ந்தவர். பின்பு இந்த நாடகத்துறையின் மூலம் தாமரைச்செல்விக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அதனை நன்றாக பயன்படுத்திக்கொண்டு பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாமல் வந்து இருந்தாலும் பின்பு நாட்கள் செல்லச்செல்ல அனைத்தையும் புரிந்து கொண்டு சிறப்பாக விளையாடி நீண்ட நாட்கள் பயணித்தார். மேலும் பிக் பாஸ் வீட்டில் தாமரைச்செல்வி ஒரு போட்டியில் ஜெயித்த போது அவருக்கு கேஸ் அடுப்பு வழங்கப்பட்டது.

அதனால் அவர் மிகுந்த சந்தோசத்தில் குதித்து எங்கள் வீட்டில் அடுப்பு இல்லை எனக்கு ரொம்ப மகிழ்ச்சி என கூறியுள்ளார். அதனை அடுத்து பிக் பாஸ் வீட்டில் உள்ள சில பொருட்களை பார்த்து இந்த பொருட்களெல்லாம் எங்கள் வீட்டில் இல்லை என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் தாமரைச்செல்வி எவ்வளவு சண்டை போடுவாரோ அந்த அளவிற்கு சில நண்பர்களையும் சம்பாதித்து வைத்துள்ளார்.

அந்தவகையில் பிக்பாஸ் வீட்டில் தாமரையின் நெருங்கிய நண்பர் வருண் ஆவார். வருண் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தாமரைச்செல்விக்கு டபுள் டோர் பிரிட்ஜ், ஓவன் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்து உள்ளாராம். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும் தாமரைச்செல்வி சக போட்டியாளர் ஒருவருடன் இச்செய்தியை கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment