21 வருடத்திற்கு பிறகு தமிழில் நடிக்க இருக்கும் அஜித் மனைவி ஷாலினி.! எந்த முன்னணி நடிகருடன் தெரியுமா.?

ஷாலினி அவர்கள் விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன்பிறகு தமிழில் பல படங்களில் நடித்த ஷாலினி நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் பெரிதும் ஆர்வம் இல்லாததால் எந்த ஒரு திரைப் படங்களிலும் ஷாலினி அவர்கள் நடிக்கவில்லை.

ஷாலினி அவர்கள் மீண்டும் 21 ஆண்டுகலுக்கு பின்பு தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளாராம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  அதுவும் எந்த திரைபடத்தில் என்றால் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி, மற்றும் விக்ரம் கார்த்திக்,  போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

இதற்கு தல அஜித்தும் ஒப்புக்கொண்டாராம் என்ற ஒருசில தகவலும் வெளியாகியுள்ளது.

shalini
shalini

Leave a Comment