மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட வில்லன் நடிகர்.! பிரபல நடிகர் செய்த உதவியால் கண்ணீருடன் நன்றி தெரிவித்த பொன்னம்பலம்.!

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் பொன்னம்பலம் வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனது முகத்தை பதிய வைத்து அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது அயராத உழைப்பினால் மக்களிடையே மிகவும் புகழ் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக இவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை ஏற்று கனகச்சிதமாக நடித்துக் கொடுக்கும் திறமை இவருக்கு உள்ளது இதனை அடுத்து கடந்த சில வருடங்களாக இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அதன் மூலம் படாத பாடுபட்டு வந்தார் ஆனால் அப்போது அவரது மருத்துவ செலவு அனைத்தும் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார் இந்நிலையில் நடிகர் பொன்னம்பலத்திற்கு மிகவும் சிறுநீரக கோளாறு பாதிப்பு அடைந்து விட்டதால் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை சமிபத்தில் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சைக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி 2 லட்சம் இவருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார் இதனை நன்றி தெரிவிக்கும் வகையில் பொன்னம்பலம் சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம் ரொம்ப நன்றி அண்ணா எனக்கு நீங்கள் கொடுத்த இரண்டு லட்சம் மிகவும் உதவியாக இருந்தது.

நீங்கள் செய்த உதவியை நான் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் என கூறியுள்ளார் மேலும் அவர் பேசியபோது எடுத்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோ காணொளியை பார்த்த இவரது ரசிகர்கள் இன்னும் நிறைய சினிமா பிரபலங்கள் உதவி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இவர் மீண்டும் சினிமா துறையில் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் எனக் கூறி வருகிறார்கள் ஆனால் இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

Leave a Comment