இரண்டு வருடமா போலீஸ்க்கு டேக்கா கொடுத்த விஜய் டிவி பிரபலம்… அதிரடியாக கைது செய்த போலீசார்

தமிழ் சின்னத்திரையில் பிரபல சேனலாக இருந்து வரும் விஜய் டிவியின் மூலம் அறிமுகமாக ஏராளமான பிரபலங்களும் வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியும் அடுத்தடுத்து வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் அறிமுகப்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறது‌. இப்படிப்பட்ட நிலையில் இதன் மூலம் லட்சக்கணக்கான ஆடியன்ஸையும் விஜய் டிவி வைத்துள்ள நிலையில் சமீபத்தில் விஜய் டிவியின் மூலம் பிரபலமான நடிகர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது விஜய் டிவியில் ஏராளமான காமெடி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பிரபலமடைந்தவர் தான் நான் நாஞ்சில் விஜயன் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார் மேலும் ஏராளமான ஷோக்களில் பெண் வேடத்தில் வந்து பலரையும் சிரிக்க வைத்தார் இப்படிப்பட்ட நிலையில் இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவரும் நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இவருக்கும் மற்றொரு யூடியூப் பிரபலமான சூரியா தேவி என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

அதாவது வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இதன் மூலம் பிரபலமானவர்தான் சூர்யா தேவி. அந்த திருமணம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட காரணத்தினால் இவர் மீது வனிதா காவல்துறையில் புகார் அளித்தார்.

மேலும் இந்த விவாகரத்தில் நாஞ்சில் விஜயனுக்கும் பங்கு இருப்பதாக வனிதா தெரிவித்திருந்த நிலையில் அது குறித்து தெரிவித்த நாஞ்சில் விஜயன் நானும் சூர்யா தேவியும் நண்பர்கள் தான் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த விவாகரத்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிய பிரச்சினையான நிலையில் சூர்யா தேவி நாஞ்சில் விஜய் இருவருக்கும் பலத்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சூரியதேவி ரவுடிகளை தன் வீட்டிற்கு அனுப்பி சென்று துன்புறுத்தியதாக நாஞ்சில் விஜயன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் தான் தன்னை தகாத வார்த்தையில் திட்டியதாக பதிலுக்கு அவரும் புகார் கொடுத்து இருந்தார் இப்படி மாறி மாறி இருவரும் புகார் அளித்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்பொழுது நாஞ்சில் விஜயனை ஆஜராகும் படி சமன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு வராத நிலையில் தொடர்ந்து சமன் அனுப்பப்பட்டு இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் இன்று வளசரபாக்கம் போலீசார் இரண்டு ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த நாஞ்சில் விஜயனை கைது செய்துள்ள நிலையில் இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிதும் அதிர்ச்சனை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment