அஜித்தின் 25வது படத்திற்கு “அமர்க்களம்” என தலைப்பு வைத்தது யார் தெரியுமா.? வெளிவரும் தகவல்

அஜித்குமார் அண்மை காலமாக சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். இருப்பினும் அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுவது அஜித்தின் 25 மற்றும் 50வது படம் தான் ஏனென்றால் அந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பரான படங்கள் இன்றும் ரசிகர்களுக்கு ஃபேவரட்  படங்களாக இருந்து வருகின்றன.

சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான அமர்க்களம் படம் அஜித்துக்கு 25-வது திரைப்படம் இந்த படம் அஜித்திற்கு மிக முக்கியமான படமாக அப்போது இருந்தது. இந்த படத்தின் மூலமாக தான் அஜீத்தும் ஷாலினியும் ஒன்றிணைந்து நடித்தனர். மேலும் இந்த படம் முடிந்த பிறகு ஷாலினியும் அஜித்தும் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அப்பொழுது மாறியது இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஷாலினி, ரகுவரன், நாசர், ராதிகா, வினு சக்கரவர்த்தி எனப் பலர் நடித்திருந்தனர். அஜித்தின் 25வது திரைப்படத்திற்கு எப்படி அமர்க்களம் பெயர் வைக்கப்பட்டது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

எஸ்பிபி டூயட் படத்தில் இடம் பெற்ற அஞ்சலி பாடலை முடித்துவிட்டு எஸ்பிபி நேராக வந்து ஏ ஆர் ரகுமான் சார் பாடல் அமர்க்களம் என்று சொன்னாராம் அதைக் நினைத்து தான் அஜித்தின்  25 வது படத்திற்கு அமர்க்களம் என தலைப்பு வைத்தாராம் பின்னணி பாடகர் எஸ் பிபி. இயக்குனர் சரண் படத்திற்கு இந்த டைட்டில் சூப்பராக இருக்கும் எனக் கூறவே..

பின்பு வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. படம் நல்ல வரவேற்பை பெற்றது  அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படமாக அது மாறியது. அமர்க்களம் பெயர் இப்படித்தான் உருவாகியது அதற்கு அடித்தளம் போட்டது எஸ்பிபி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment