ஹைகோர்ட்டும் கை விரித்தது.! மிரா மிதுனுக்கு சரியான ஆப்பு.!

நடிகை மீரா மிதுன் இவர் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை மீரா மிதுன்.

அதனைத் தொடர்ந்து ஜோடி நம்பர் ஒன் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்றார் அதன்பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 யிலும் போட்டியாளராக பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த மாதங்களாக தனது ஆண் நண்பருடன் செய்யும் சேட்டைகளையும், பல நடிகர்களை  பற்றி இல்லாத பொல்லாததாக பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

meera-mithun

அதுமட்டுமல்லாமல் ஜாதி குறித்து கேவலமாக பேசிய வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில்  வெளியிட்டார். இதன் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதன் காரணமாக நடிகை மீரா மிதுன் வன்கொடுமைச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டார். மீரா மிதுன் அவர்கள் நான் பல திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளேன் என தனது ஆண் நண்பருடன் ஜாமீன் மனுவை கேட்டுள்ளார்.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி செல்வகுமார். புலன்விசாரணை ஆரம்ப நிலையிலேயே உள்ளதாகவும், மேலும் சிறையிலடைத்து சில காலங்களே ஆகியதாலும் ஜாமீன் வழங்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார் நீதிபதி செல்வ  குமார் அவர்கள். இதனால் நடிகை மீரா மீதுனுக்கு ஜாமின் வழங்கப்படவில்லை.

Leave a Comment

Exit mobile version