இந்த படம் சுத்தமா ஓடாது என முடிவு பண்ணியா சூப்பர் ஸ்டார்.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினி இவரை பலரும் சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் இவருடைய இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை இன்று வரையிலும் எந்த ஒரு நடிகராலும் கைப்பற்ற முடியவில்லை அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலம் சினிமாவில் உயர்ந்து நிற்கிறார் நடிகர் ரஜினி.

ரஜினி அவர்கள் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் ரஜினி. அதுமட்டுமல்லாமல் தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனரையும் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ரஜினி அவர்கள் தன்னுடைய ஒரு திரைப்படத்தை ஓடவே ஓடாது என முடிவு எடுத்து இருக்கிறார் ஆனால் அந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று நடிகர் ரஜினியின் சினிமா வாழ்க்கைகு ஒரு திருப்பு பூனை திரைப்படமாக அமைந்திருக்கிறது.

அதாவது 1989 ஆம் ஆண்டு சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினி அவர்கள் நடித்திருந்தார். ஆரம்பத்தில் இந்த படத்தின் கதையை ரஜினியிடம் சுந்தர்ராஜன் கூறவே இல்லையாம் ஆனால் ரஜினி அவர்கள் எத்தனை நாட்கள் கால் ஹீட் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன் பிறகு நடித்து முடித்த பிறகு நடிகர் ரஜினி அவர்கள் இந்த படம் சுத்தமாக ஓடவே ஓடாது என ஒரு முடிவு எடுத்து இருக்கிறார். ஆனால் இந்த திரைப்படம் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது மட்டுமல்லாமல் அந்த காலகட்டத்தில் 90 லட்சத்திற்கு மேல் வசூலித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நடிகர் ரஜினி அவர்கள் சொன்னது தவறுதான் என வாயடைத்துப் போய் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Comment