தலன்னு சொன்னதும் அரங்கை அதிரவைத்த மாணவர்கள்.! காண்டில் விஜய்செதுபதி.. வைரல் விடியோ

பேசிக் கொண்டிருக்கும் பொழுது மாணவர்கள் கத்தியதால் கடுப்பான விஜய் சேதுபதி தேவையில்லாம கத்தாதிங்க நம்ம என்ன பேசிட்டு இருக்கோம் நீங்க என்ன செஞ்சுகிட்டு. இருக்கீங்க என கோபமாக கேட்டுள்ளார் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜவான் திரைப்படத்திற்காக தயாரித்து வருகிறார் இந்த படத்தை அட்லீ இயக்க ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ஹீரோயினாக நடிகை நயன்தாரா நடித்து வரும் நிலையில் ஷாருக்கானுக்கு வில்லனாக இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்ற வருகிறது இப்படிப்பட்ட நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது, அதாவது யார் மீது கோபம் வந்தாலும் வெளிக்காட்டாதீர்கள் ஏனென்றால் டைம் இருக்கு இன்னைக்கு என்னோடு சண்டை போட்டவனை கல்லூரி முடிந்த பின்னர் சந்திக்கும் பொழுது அவன் எனக்கு நண்பன் ஆகிறான்.

எல்லாத்துக்கும் டைம் கொடுங்க உடனே எதிர்வினையற்ற வேண்டாம் நாம் உடல் ரீதியாக வளர்வதனால் பெரிய ஆள் என நினைக்காதீர்கள் இன்றைக்கு இருக்கும் வியாபார உலகம் உங்களுடைய நேரங்களை திருடுவதற்கு தயாராக இருக்கிறது. உங்கள் நேரத்தை எந்த வகையில் திருடலாம் உங்க மூளைய எப்படி செயல்படாமல் செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களின் வாயிலாக சண்டை போட்டுக்கலாம் அசிங்கமா பேசிக்கலாம் என்று உங்களுக்கு சுதந்திரம் கொடுத்த மாதிரி நடிக்கிறாங்க நம்பிடாதீங்க டெக்னாலஜி உங்கள திங்க பாக்குது உங்கள பயன்படுத்த வைத்து மார்க்கெட்டிங் செய்து காசு சம்பாதிக்கலாம் என்று பார்க்கிறார்கள். என்னென்னலாம் சாப்பிட வைக்கலாம், எதெல்லாம் சாப்பிட்டா நீங்க நோயாளி ஆகுவீங்க, நோயாளி ஆனா என்ன மருந்து சாப்பிடுவீங்க எவ்வளவு நாள் நோயாளியாக உங்களை கஷ்டப்பட வைக்க முடியும் உங்களை எப்படி ஆட்கொள்ளலாம் அப்படிங்கிறதுல இந்த உலகம் ரொம்ப ஆர்வமாக இருக்கிறது நம்மள மயக்குவாங்க ஜாக்கிரதையா இருக்கணும் எனக் கூறிய விஜய் சேதுபதி இறுதியில்,

“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்  அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை”.

என்கின்ற திருக்குறளை கூறினார் இதில் கடைசியாக அவர் தலை எனக் கூறியதை கேட்டதும் அங்கிருந்த அஜித் ரசிகர்கள் கத்தி கூச்சல் போட்டனர் இதனால் கடுப்பான விஜய் சேதுபதி தேவையில்லாமல் கர்த்தாதிங்க நாம என்ன பேசிக்கிட்டு இருப்போம் நீங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க என்ன கோபமாக கேட்டுள்ளார் இது குறித்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment