ஒரு திரையரங்கில் மட்டுமே 30 லட்சத்துக்கும் மேல் வசூல் அள்ளிய வலிமை – ஆச்சரியத்தில் மற்ற நடிகர்கள்.

நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் மூன்று வருடங்கள் கழித்து திரையரங்கில் இன்று கோலாகலமாக வெளியாகியது. படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் இரவே வந்து விட்டனர் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி ஒருவழியாக படத்தைப் பார்த்து வெளியே வந்து கொண்டாட ஆரம்பித்துள்ளனர். படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் செண்டிமெண்ட் கலந்திருப்பதால் அஜித் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்து இழுக்கும் என கூறப்படுகிறது.

படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சிகளை வைத்து பார்க்கும்போது இந்திய அளவில் மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது. மேலும் எதிர்பார்த்ததுபோல் எப்படி நம்ம ஹாலிவுட் பேசுகிறோமோ அது போலவே இந்தியாவின் மிஷின் இம்பாசிபிள் என கூறப்படுகிறது.

வலிமை திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல்வேறு சாதனைகளை செய்து உள்ள நிலையில் படம் வெளிவந்து உள்ளதால் இனி அடுத்தடுத்த நாட்களில் நன்றாகவே கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் அந்த அளவிற்கு படம் இருப்பதாக கூறுகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ஒரே ஒரு திரையரங்கில் மட்டுமே சுமார் 30 லட்சத்திற்குமேல் கலெக்ஷன் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள AARS பிரமாண்ட திரையரங்கில் 5 மல்டிபிளக்ஸ் ஸ்கிரீன் உள்ளது. இதில் மட்டுமே சுமார் 17 ஆயிரம் பேர் இந்த வலிமை படத்தை பார்த்து உள்ளதாக கூறப்படுகிறது இதனால் மட்டுமே ஒரே நாளில் வலிமை திரைப்படம் சுமார் 60 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்ததாக அங்கு கூறப்படுகிறது.

முதல் நாளே இந்த அலப்பறை இன்னம் போக போக இன்னும் வேற லெவலில் கலெக்சன் கட்டும்  அஜித் ரசிகர்களும் கொண்டாடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது

Leave a Comment