“ஜெயிலர்” படத்தின் கதை லீக்.. மக்கள் பார்த்து சலித்த கதையை மீண்டும் தூசி தட்டிய நெல்சன்.! கடுப்பில் ரசிகர்கள்.

இயக்குனர் நெல்சன் தமிழில் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் அதன்பிறகு நெல்சன் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்களும் ஆசைப்பட்டு வந்த நிலையில் விஜயுடன் கைகோர்த்து பீஸ்ட் என்னும் படத்தை எடுத்திருந்தார் நெல்சன் மற்றும் விஜயின் கூட்டணி மேல் ரசிகர்கள் பலரும் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.

ஆனால் படம் வெளிவந்து மோசமான விமர்சனங்களை பெற்று வந்தது. நெல்சன் இதற்கு முன் இரண்டு ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் பீஸ்ட் படம் மக்கள் எதிர்பார்த்தபடி அமையாததால் நெல்சனை நெட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்து வந்தனர். தற்போது நெல்சன் ரஜினியுடன் இணைந்து தலைவர் 169 ஆவது படத்தை எடுக்க உள்ளார்.

இந்த படம் எப்படி இருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் பெரிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் லோகேஷ் மற்றும் கமல் கூட்டணியில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் திரையரங்கில் கோலாகலமாக நல்ல விமர்சனங்களை பெற்று  ஒளிபரப்பாகி வருகிறது. இந்தப் படம் தயாராகி வந்த நிலையில் படத்தின் கதை இதுதான்.

சிறையில் இருக்கும் ஒரு பெரிய தீவிரவாதியை தப்பிக்க வைக்க ஜெயிலுக்கு இன்னொருவர் வருவது போன்ற கதை என சமூக வலைதளங்களில் உலா வந்தது ஆனால் விக்ரம் படம் வெளிவந்து கதை முற்றிலும் மாறுபட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தின் கதை லீக் ஆகியுள்ளது என அதைப்போல் ஜெயிலில் இருக்கும் ஒரு தீவிரவாதியை தப்பிக்க வைக்க ஒரு தீவிரவாதி வருவதாகவும்..

மேலும் இந்த கும்பலை கண்டுபிடிக்க ரஜினி ஜெயிலர் ஆக செயல்படுவதாகவும் கூறப்படுகின்றன. ஆனால் படம் வெளிவந்தால் தான் ஜெயிலர் படத்தின் கதை நமக்கு முற்றிலும் தெரியவரும் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் முன்பு விக்ரம் படத்தின் கதை இதுதான் என வந்த தகவலையே ஜெயிலர் படத்தின் கதையாக நெல்சன் எடுத்து வருகிறார் என ஒருபக்கம் நெல்சனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Leave a Comment